Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

பகுதி – 1.1

கிட்டதட்ட 7 வருடங்கள் ஆகிவிட்டது இந்த ஊரை விட்டு போய். இப்ப தான் இந்த மண்ணை மிதிக்க நாள் கிடைத்தது! பிளாஸ்டிக் கடையில் வேலை பார்த்து விட்டு சென்றது. ம்ம்ம்… இப்போ நினைத்தாலும் அப்படியே பசுமையாய்…

இப்படியாய் அவனுள் பழைய நினைவுகள் வந்து,வந்து செல்கிறது அவனையும் அறியாமல். அவன் சுற்றித்திரிந்த இடமெல்லாம் இப்போ எங்கோ காணாமல் போய் விட்டது போலவும், ஏதோ ஒரு புதிய இடத்திற்கு வந்து இருப்பது போலவும் ஒரு உணர்வு அவனுள்…அட என்ன ரஹிமு, என்னமோ இந்த ஊருக்கு ஏதோ புதுசா வந்தது போல பாக்குறே என்ற அவன் நண்பனின் குரல் கேட்டதும் தான் அவன் நினைவுகள் கலைந்தன தற்காலிகமாய்…

டேய் முஜீப் எப்படிடா இருக்கே? அத்தா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களாடா?

ம். அவங்களுக்கு என்னடா, சந்தோசமா இருக்காங்க நீ எப்படிடா இருக்கே? அமெரிக்கா லைஃப் எல்லாம் எப்படி நல்லா இருக்கா?

ஏதோ இருக்குடா.

என்னாடா ரொம்ப சலிப்பா சொல்லுறே?

அமெரிக்கா என்னாடா பெரிய அமெரிக்கா! நம்ம ஊரு தான் சொர்க்கம்டா.

ஏன்டா இப்படி சொல்லுறே? அவனவன் அமெரிக்கா போக முடியதான்னு தவமா கிடக்கிறானுங்க…

அது சரி தான். நான் இல்லைனு சொல்லலை. எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை கதை தான்.நல்லா சம்பாதிக்கணும்னா மட்டும் தான் அங்கே போகலாம்டா.ஆனால் நாம் நிறைய சந்தோசங்களை இழக்கணும்டா. சரி, சரி நான் என் புராணத்தை பேசி உன்னை கஸ்டபடுத்த விரும்பலை. வேறெ சொல்லு.

சரி அப்படியே நட, நடந்துகிட்டே பேசலாம்.

தொடரும்…

அறிமுகம்

நண்பர்களே,

வணக்கம்!

நாம் எல்லோரும் நம் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பார்த்து, நம் பழைய நினைவுகளை கொஞ்சம் அசை போட்டோமானால், நாம் எல்லோரும் ஏங்குவது நமக்கு அந்த பழைய வயது திரும்ப கிடைக்காதா என்று. ஏன், நிறைய ஆதங்கமும்,பொறாமையும் கூட ஏற்படும் கட்டாயமாய் நமக்குள்…

எனக்கும் அப்படி ஏற்ப்பட்டது, அந்த ஆதங்கத்தை தீர்த்து கொள்ளவும், என் பழைய நினைவுகளை உங்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவும் நினைத்தேன்.

அதற்க்காவே இந்த பகுதியை ஆரம்பித்துள்ளேன்…

எழுதுகிறேன் விரைவில்… நன்றி!

இப்படிக்கு,
இனியவன்

Follow

Get every new post delivered to your Inbox.